நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். சங்கீதம் 52:8 கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன், ஏசாயா 27:3 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும். ஏசாயா 27: 6 Album: Pradhana Aasariyarae Volume 2 Song: Abishega Olivamaram Lyrics, Composed and Sung: Dr. Joseph Aldrin Music: Isaac D
For video lesson of lead and chords: ----------.>Click Here
Lyrics:
அபிஷேக ஒலிவ மரம் உம் ஆலயத்தில் நடப்பட்டவன் உம் சமூகத்தில் வாழ்கின்றவன் உம் அன்பையே நம்புவேன் உம் வசனம் தான் பசியாற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதமும் இன்றி காப்பவர் பெலன் தரும் புகலிடம் நீரே உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன் இந்த உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன்
Keyboard notes:
Chords:

.jpg)

0 comments:
Post a Comment